டியூஷனுக்கு வந்த மாணவ, மாணவிகள்..! பாலியல் கொடுமை செய்த ஆசிரியை.!  - Seithipunal
Seithipunal


சென்னை டி நகரைச் சேர்ந்த சஞ்சனா என்பவர் பட்டதாரியாக இருக்கின்றார். இவரது வீட்டில் 10,11,12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகின்றார். இவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

சஞ்சனாவின் டியூஷனில் படித்து வரும் மாணவி ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் ஆசிரியை சஞ்சனா மற்றும் சஞ்சனாவின் நண்பர் பாலாஜி ஆகியோர் தன்னை மிரட்டி, வற்புறுத்தி மிகவும் ஆபாசமாக வீடியோ எடுத்தனர் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை சஞ்சனா மற்றும் அவருடைய நண்பர் பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். டியூஷன் நடத்தப்படும் வீட்டிலேயே இதற்கென்று அவர்கள் தனியாக படுக்கை அறை ஒன்றை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

அங்கேயே மாணவ மாணவியரை ஆபாசமாக படங்கள், வீடியோ எடுத்து அவற்றையும் மாணவர்களிடம் காண்பித்து உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி மிரட்டி பணம் பறித்துள்ளனர். 

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட இருவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்த பொழுது, அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளது. வீட்டிற்குள் அடைத்து வைத்து மாணவ, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexual harassment in tuition center


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->