துரத்தி துரத்தி காதல், முகம், கழுத்து, வயிறு என பெண்ணை கொடூரம் செய்த கொலையாளி.!
seventeen age girl murder for one side love
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் கொத்தனாராகப் பணியாற்றி வருபவர் ஜெயராஜ் என்பவரது மகள் 17 வயதான லாவண்யா.
இந்தநிலையில், தனது தந்தையுடன் பணிபுரிந்து வந்த லாவண்யாவை ஆந்திராவைச் சேர்ந்த துர்க்காராவ் என்பவன் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை கொடூரமாக செய்தான். இதையடுத்து துர்காராவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டார், அப்போது ஒரு தலைக் காதலால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
லாவண்யாவின் தாய் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்தவர். தாய் தந்தை இருவரும் பட்டிபுலத்தில் தங்கி கட்டிட வேலை செய்துவர, லாவண்யா விஜயநகரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்பை படித்து முடித்தார். அதே பகுதியைச் சேர்ந்த இந்த துர்காராவும் லாவண்யாவோடு ஒரே பள்ளியில் படித்து வந்ததாகவும் அப்போது அவன் லாவண்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் தெரிகிறது.
படிப்பை முடித்து தனது தாய் தந்தையுடன் பட்டிபுலம் வந்த லாவண்யாவை பின் தொடர்ந்தே வந்த துர்காராவ், லாவண்யாவின் தாய், தந்தையிடம் நல்லவன் போல் பேசி, அவர்களது சிபாரிசிலேயே பட்டிபுலத்தில் 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கும் சேர்ந்திதுள்ளான். அங்கு வேலைக்குச் சேர்ந்ததில் நாள் முதலே கடந்த ஆறு மாதமாக தன்னை காதலிக்கும்படி லாவண்யாவை அவன் தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியான லாவண்யா, அவனுடைய காதலை ஏற்காமல், இந்த விவகாரத்தை தனது பெற்றோரிடமும் சொல்ல பயந்து அவனிடம் இருந்து ஒதுங்கிச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில்தான் நேற்று காலை லாவண்யாவை வழக்கம்போல் காதலிக்க வற்புறுத்திய துர்க்காராவ், காதலுக்கு அவர் சம்மதிக்கவில்லை என்றதும் தான் வைத்திருந்த கத்தியால் முகம், கழுத்து, வயிறு என 6 இடங்களில் சரமாரியாக லாவண்யாவை குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் பருவ வயதில் எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் பெண்கள் பெற்றோரிடத்தில் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் பக்குவத்தையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். துர்காராவின் தொடர் காதல் தொல்லை குறித்து லாவண்யா அவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்தால் இந்த கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம்.
English Summary
seventeen age girl murder for one side love