ரேசனில் 1000 வழங்குவதற்காக, மாற்றப்படும் செர்வர்….!
server changed in P.O.S. in all ration shops
பொங்கல் பரிசாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், 1000 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே, உயர் நீதி மன்றம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ருபாய் பணம் வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணம் விநியோகம் செய்யப்பட்ட முதல் 3 நாட்களில், எல்லா தரப்பினரும், இந்தப் பணத்தை வாங்கிச் சென்றனர். தற்போது, நீதி மன்றத்தின் தடை உத்தரவால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் பறி போய் விடுமோ, என்று மக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.
பல ரேசன் கடைகளில், கலவரம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, சென்னையில் உள்ள செர்வர் மூலம், வெப்சைட்டில் மாற்றங்கள் செய்து வருகின்றன.
அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்) மிஷினை சுவிட்ச் ஆப் செய்து, மீண்டும் ஆன் பண்ணச் சொல்லி உத்தரவிடப் பட்டுள்ளது.
English Summary
server changed in P.O.S. in all ration shops