அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி எத்தனை வாக்கு பெறுவார்?! முன்கூட்டியே வெளியிட்ட தகவல்!!
senthil balaji says about aravakurichi volume
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், "அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன்.
தொகுதியில் வீடு இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 25 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதியில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள்அமைத்து தரப்படும்.
நான் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது வடிவமைத்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
senthil balaji says about aravakurichi volume