தாய் தந்தையை பிணமாக கண்டு கதறியழுத குழந்தைகள்.! தற்கொலைக்கான காரணத்தை அறிந்து கண்கலங்கிய காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டுநராகி பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சுமிதா (வயது 32). இவர்கள் இருவருக்கும் பிரகதி (வயது 15) என்ற மகனும்., நவ்தீப் என்ற (வயது 13) மகனும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில்., கடந்த சில வருடத்திற்கு முன்னதாக நேரம் சரியில்லை என்று கூறிய செல்வம்., தனது குடும்பத்தாருடன் தன் மாமனாரின் இல்லத்திற்கு சென்று இருந்துள்ளார். 

சேலம் சூரமங்கலம் மனைவி கொலை,

இந்த நிலையில்., செல்வதற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சமயத்தில் நேற்றும் வழக்கம் போல குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் - சுமிதாவை மண்வெட்டியால் தக்கையுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுமிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தது போல மின்விசிறியில் உடலை தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு தொங்கவிட்டுள்ளார். 

died, murder, killed, suicide attempt, கொலை, இறப்பு,

காலையில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மாலையில் வீட்டிற்கு திரும்பிய நிலையில்., வீடு உள்தாழிட்டு இருந்ததால் பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக கணவன் - மனைவி இருவரும் பிணமாக இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., செல்வம் சொந்தமாக ஆட்டோ வைத்து பணியாற்றி வந்த நிலையில்., சொந்த ஆஒட்டவை விற்பனை செய்து மற்றொருவரின் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தின் காரணமாக வீணாக பணமும் செலவாகியுள்ளது. இதனால் மனைவி கண்டித்ததை அடுத்து ஏற்பட்ட ஆத்திரத்தில்., செல்வம் மனையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இரண்டு குழந்தைகளும் தாய் - தந்தையை இழந்து வாடி வருகின்றனர். 

cinema news in tamil today 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam husband killed wife and attempt suicide due to family problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->