சேலம்: கறி விருந்து கெடாய்வெட்டு.! மொத்தம் 46 பேரை தட்டி தூக்கிய கொரோனா.!
selam 46 people affected corona
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். தமிழக அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இன்று கொரோனாவால் 5,986 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,742 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,01,913 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 116 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையும் மீறி அங்கு கறி விருந்து நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
English Summary
selam 46 people affected corona