ரஜினி அவரது ரசிகர்களுக்கு 'துக்ளக்' கொடுக்க வேண்டும்... கிண்டலாக பேசிய சீமான்..!
seeman troll rajinikanth and his fans
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசு ரஜினியை வைத்து நாடகம் போடுவதாக தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த நடித்த படங்கள் அனைத்தும் வன்முறைப் படங்கள் என்றும், ஆனால், தற்போது வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்வதாகவும் சாடியுள்ளார்.
முன்னதாக, துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று ரஜினி பேசியிருந்தார், எனவே மண் சோறு சாப்பிடும் அவரது ரசிகர்களுக்கு அறிவு வர 'துக்ளக்' வாங்கி கொடுக்கட்டும் என்றும் கிண்டலக பேசியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்ககூடாது என்று முழங்கி கொண்டிருந்த சீமானே, அடுத்த சில மணித்துளியில் பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார்
அதன் பின்னர், பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் ஒரு தீவிரவாதி என்றும், அவரை வெட்டி வீழ்த்தியதால் தீவிரவாத பயங்கரவாதம் என்றும் தட்டுத் தடுமாறி பேசி முடித்தார் சீமான்.
English Summary
seeman troll rajinikanth and his fans