நெய்வேலியில் அரங்கேறிய சோகம்... அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் சீமான்.!!
Seeman speech about NLC Accident
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடி விபத்து தொடர்பாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கையில், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததில், தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனும் செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.
அத்தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன். மேலும், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனியாவது தொழிலாளர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்..
Tamil online news Today News in Tamil
English Summary
Seeman speech about NLC Accident