சட்டப்பேரவை தேர்தலுக்கு விறுவிறுப்புடன் ஆலோசனை.. பம்பரமாய் சுழலும் சீமான்.!
Seeman NTK Party Politics Preparation Meeting for Assembly Poll 2021
2021 தேர்தல் களப்பணிகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர்களுடன் சீமான் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் 26-01-2021 அன்று மாலை 4 மணியளவில் சேலம், கே.எம்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இன்று 27-01-2021 காலை 10 மணியளவில் கோயம்புத்தூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
எதிர்வரும் 30-01-2021 சனிக்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.
இறுதியாக எதிர்வரும் 01-02-2021 திங்கட்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Seeman NTK Party Politics Preparation Meeting for Assembly Poll 2021