#Breaking: எம்.ஜி.ஆர் - கருணாநிதி தமிழகத்திற்கு செய்தது என்ன?.. சீமான் ஆவேசம்..!
Seeman Latest Pressmeet 23 December 2020
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் விவகாரம் அல்ல. மக்களுக்காக ஆற்றும் தொன்றே அரசியல்.
தேர்தல் களப்பணிகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிறப்பாக நடந்து வருகிறது. நாங்கள் ஒற்றைக்கட்சி ஆட்சிமுறையை எதிர்க்கிறோம். நாங்கள் எப்போதும் தனியாகத்தான் களம்காண்போம். அமெரிக்கா போல பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அது இல்லை.
எம்.ஜி.ஆரை பொறுத்த வரையில், இலங்கையில் தமிழருக்கான போரில் உறுதுணையாக இருந்தார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் - கருணாநிதி தமிழகத்திற்கு செய்தது என்ன?. அன்றைய காலத்திலேயே தமிழகத்திற்கான உரிமையை விட்டுக்கொடுத்து வந்தார்கள் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Seeman Latest Pressmeet 23 December 2020