எண்ணத்தை செஞ்சீங்க.. எல்லாம் பாதகம் தான்.. கொரோனாவிலும் கொள்ளை.. சீமான் பரபரப்பு பேட்டி.!!
Seeman Latest Press Meet 28 Aug 2020
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " வேலூர் சிறையில் இருந்த சமயத்தில் மற்றும் மற்றொரு 2 முறை நளினியை சந்தித்தோம். நாங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள சந்தித்தோம். பிற நோக்கம் என்பது இல்லை.
நான் அறிந்தவரை இ-பாஸ் முறையில் பல கொள்ளைகள் நடந்துள்ளது. இ-பாஸ் மூலம் பல கொள்ளைகள் நடந்துள்ளது. இந்த அரசிற்கு இ-பாஸ் முறையில் கூட கொள்ளையடிக்கும் நிலையை அறிந்து வைத்திருக்கிறது. இ-பாசிலாவது இந்த அரசு பாஸ் ஆகட்டும்.
உயிர் வாழ்வது தான் முதன்மையானது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் வரை படிக்க சொல்வது நல்லதல்ல. இணையத்தளம் மூலமாக எத்தனை பிள்ளைகள் படிக்கிறார்கள்?.. கிராமங்களில் இணையதள கல்வியில் நிலை என்ன?.. வீட்டில் இருக்கும் ஏழை, எளிய பிள்ளைகள் எப்படி படிக்க இயலும்.
இரண்டு வருடங்கள் படிக்கவில்லை என்றால் என்ன ஆக போகிறது?.. நீட் தேர்வை பொறுத்த வரையிலும் தரமான மருத்துவர்களை உருவாக்குவதாக கூறினீர்கள். போலி மருத்துவர்கள் பிரச்சனையும் அடிபடுகிறது. எதற்கு அது தேவையில்லாதது? " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Seeman Latest Press Meet 28 Aug 2020