சனாதன சக்திகளை எதிர்க்க விசிக திருமாவளவன் உடன் கைகோர்க்கும் நாதக சீமான்! - Seithipunal
Seithipunal


திருமாவளவனின் அழைப்பை ஏற்ற சீமான்!

நேற்று தமிழ் தந்தை சிபா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் அவர் திருவுரு சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து ஆக் 2ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தினை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சனாதனத்திற்கு எதிரான அனைத்து கட்சிகளுக்கும் விசிக தொல் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். 

அப்போது செய்தியாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அழைப்பு விடுப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.

சனாதனத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் எங்களின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறேன்" என பதிலளித்திருந்தார்.

இன்று அரசு மருத்துவர் சார்பில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் சமுக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டதிற்கு அழைப்பு விடுத்துள்ளார் நீங்கள் செல்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த சீமான் " அண்ணன் திருமாவளவன் பொது வெளியில் அழைப்பு விடுத்துள்ளார். என்னை அழைத்துப் பேசினால் அதை பற்றி நாங்கள் பேசுவோம். நாங்கள் பயணிப்பது வெவ்வேறு தளமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். விடுதலைச்சிறுத்தைகளின் சனாதன சக்திகளுக்கு எதிரான பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும்" என சீமான் பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman joining hands with Thirumavalavan to oppose Sanatana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->