கதறி கதறி அழும் சீமான்..! உருக்கத்தில் தொண்டர்கள்..ஆச்சர்யத்தில் ஊர்மக்கள்.!  - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் எருக்கூர் அருகே தில்லை பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அன்புசெழியன் சீமானின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். சமீப காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் விடுப்பு எடுத்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட உடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக நாகை மாவட்டத்திற்கு வந்தார். சீமான் வரும் செய்தியை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினரும் அன்புசெழியனின் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.

அன்புசெழியன் வீட்டுக்குள் நுழைந்த தலைவர் சீமான், ஓட்டுநர் அன்புசெழியன் உடலை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். சீமான் தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி கதறி அழுததை கண்ட அவரது தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். அதன் பின் இறுதிச் சடங்கு நடக்கும் வரை சீமான் அங்கேயே இருந்தார். 

இறுதி பயணத்துக்கு அன்பு செழியனின் உடலை சுடுகாட்டுக்கு சீமான் சுமந்து சென்றார். கார் ஓட்டுநராக இருந்தாலும் கூட அன்புசெழியனை தனது தம்பியாக கருதி சீமான் செய்த காரியம் அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.  சீமானின் இந்த செயலை கண்ட நாம் தமிழர் கட்சியினர் தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman crying video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->