சென்னைக்கு அடுத்து அமையப்போகும் இரண்டாவது விமான நிலையம்.! எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னைக்கு அருகில்  இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நாளுக்கு நாள் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனால் குட்ட நெரிசலை தவிர்க்க, இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு தகுதியான இடங்கள் தமிழக அரசு சார்பில் ஆராயப்படுகின்றன.

அதன்படி, பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களிலிருந்து சுமார் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மேலும், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தில் 50 சதவீத இடம் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். மீதமுள்ள 50 சதவீத இடத்தைத்தான் விவசாயிகளிடம் இருந்து தான் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

அதனால், சென்னை மீனம்பாக்கத்துக்கு அடுத்து இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியிலேயே அமைப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

second airport near chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->