தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
Schools holiday in 4 taluks of Nilgiri district due to continuous rain
தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்
English Summary
Schools holiday in 4 taluks of Nilgiri district due to continuous rain