திண்டுக்கல் அருகே பள்ளி வேன் விபத்து.! 20 மாணவர்கள் காயம்.!!
School van accident near Dindukal. 20 students hurt
திண்டுக்கல்லில் இன்று காலை பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற தனியார் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் பள்ளி குழந்தைகள் 20 பேர் லேசான நிலையில் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியில் உள்ள புனித சூசையப்பர் நடு நிலைப் பள்ளியில் படிக்கும் கிராம மாணவர்களை சுற்றுவட்டார பெற்றோர்கள் தனியார் வேன் ஒன்றை ஒப்பந்தம் செய்து அதில் அனுப்பி வைத்து உள்ளனர்.
வழக்கம் போல இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் முள்ளிப்பாடி-மோளப்பாடிக்கு இடையே சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது. வேனை ஓட்டுநர் பாண்டி இயக்கியுள்ளார். விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் கூறும்போது மோளப்பாடிக்கு அருகே சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுனர் பக்கவாட்டில் திரும்பியதால் விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளார். இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் பகுதியில் விழுந்தது சிறிய பள்ளம் என்பதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இதில் 20 குழந்தைகளும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் ஒரு சிலரை மற்றும் மருத்துவர்கள் மாலை வரை இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
School van accident near Dindukal. 20 students hurt