திருமண ஆசை காட்டி ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியர்! போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
school teachers love
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் இவரது வயது 27. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
அந்த பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் மினாத்தூர் பகுதியை சேர்ந்த சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தார். இவரது வயது 26. இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
அப்போது விக்னேஷ்வரன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு ஆசிரியை வற்புறுத்தியபோது விக்னேஷ்வரன் மறுத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.