அரசு பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து விபரீதம்.!
school Roof fell down
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகில் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்த்து கொண்டு விழுந்தது. இந்த நிலையில் அதிகாலை நேரம் என்பதால் பெரும் ஆபத்தில் இருந்து மாணவர்கள் உயிர் தப்பினார்கள்.
நாமக்கல் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வருகின்ற அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியின் வகுப்பறை ஒன்றில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.
இதில் மாணவர்கள் அமரும் மேசை, பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லால் செய்த அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தது.
பள்ளி நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வகுப்பறை சேதமடைந்துள்ளதால் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.