தமிழகத்தில் பொங்கல் விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிகள் திறப்பு.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வி ஆணையர்.!
school reopen after pongal leave
அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கு நேரடியாக நேரடி வகுப்பு என்பது கட்டாயம் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த உடன், வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி அன்று முதல், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல பள்ளிகள் தொடங்கப்படும் என்று, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சற்றுமுன் வந்த செய்தி :
English Summary
school reopen after pongal leave