படித்தது மறந்து போனதால்..பள்ளி மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஞாபக மறதி காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு ஞாபகமறதி இருப்பதால் சரியாக படிக்க முடியவில்லை. அதனால் ஞாபகம் மறதி குணமாக மாத்திரையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இருந்த போதிலும் கூட ஞாபக மறதி சரியாகவில்லை. இதனால், தன்னால் சரியாக படிக்க முடியவில்லை, வாழவே பிடிக்கவில்லை என வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு உடலில் தீ வைத்து கொண்டுள்ளார்.

பின்னர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மாணவியின் பெற்றோரை விசாரித்து வருகின்றனர். மேலும், பள்ளி மாணவி படித்தது மறந்து போனதால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl suside reason for memory loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->