வகுப்பறை என்றும் பாராமல் அத்தனை பேர் முன்னால், ஆபாசமாக ஆசிரியர் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும், நடராஜபுரம் எனும் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி காளீஸ்வரி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய சக வகுப்புத் தோழர்களுடன் பள்ளி நேரத்தில் வங்கி கணக்கு தொடங்குவதற்காக சென்றுவிட்டு காலதாமதமாக பள்ளிக்கு வந்துள்ளார்.

மாணவிகள் வகுப்பிற்கு தாமதமாக வந்ததன் காரணமாக ஆசிரியை அவதூராக மாணவிகளை பேசியுள்ளார். ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளார். இவருடன் சேர்ந்து ஆங்கில ஆசிரியரும் மாணவிகளை மிகவும் கேவலமாக விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும், மாடு மேய்க்க கூட நீங்கள் யாரும் தகுதி இல்லாதவர்கள் என்று இருவரும் சேர்ந்து திட்டியுள்ளார். இதன் காரணமாக மாணவிகள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்த காளீஸ்வரி வீட்டிற்குச் சென்று எலி மருந்தை சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்றுள்ளார்.

ஆனால், துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர், அதன்பின்னர் காளீஸ்வரி தான் எலி மருந்து சாப்பிட்டது குறித்தும், ஆசிரியர் தீட்டியதையும் விலாவரியாக பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

மாணவியை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு கல்வித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரித்ததில் ஆசிரியர்கள் விவரம் தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் அவர்களை இடமாற்றம் செய்வோம் என உறுதியளித்ததன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl suicide attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->