பள்ளி சிறுமிகளை குறிவைக்கும் ரோடு சைடு ரோமியோக்கள்.. தலையில் அடித்து கொண்டு வருத்தப்படும் பொதுமக்கள்.. நாடகக்காதல் துயரங்கள்..!!
School girl spoil life drama lover and sexual animal culprits
தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, மதுரை மற்றும் சென்னை போன்று தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் பெண் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தினை சார்ந்த 13 முதல் 17 வயதுடைய சிறுமிகளை வேலைவெட்டி இல்லாமல் சுற்றித்திரியும் நாடகக்காதல் கும்பல்களை சார்ந்த நபர்கள் காதல் போர்வையில் சிறுமிகளை ஏமாற்றி வருகின்றனர்.
இவர்களின் ஆசை வார்த்தையில் விழும் சிறுமிகள் பள்ளிக்கு வரும் போது மோட்டார் வாகனம், பரிசு என்று கையில் காத்திருக்கும் ரோமியோக்கள் சிறுமிகளை தங்களின் வலையில் விழவைக்கின்றனர். மாணவிகளின் முன்னிலையில் பல்வேறு வித்தைகளை காண்பித்து அவர்களின் மனதை மயக்கும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறுமிகளுக்கு ஏற்படும் ஈர்ப்பை பயன்படுத்தி பகல் வேலையில் பள்ளிக்கு வரும் சிறுமிகளை ஏமாற்றி அங்குள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றனர். மேலும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சில்மிஷம், பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம் என்று அரங்கேறுகிறது. சில காமுகர்கள் இதனை புகைப்படம் மற்றும் விடியோவாக பதிவு செய்கின்றனர்.
நல்லவன் போல உருகி உருகி பேசிய காதலன், பின்னாளில் சிறுமியை புகைப்படத்தை காண்பித்து மிரட்டி தனக்கு விரும்பும் இடத்திற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்கிறான். தனது நண்பர்களுக்கும் இரையாக்குகிறான். இதுபோன்று குற்றங்கள் நடைபெறும் இடங்கள் காவல் துறையினருக்கு தெரிந்தாலும், அவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதும் இல்லை. மேலும், இவர்களின் பாச மழையால் சாலையில் செல்லும் நபர்கள் கூட தெரியாமல் அன்பாக சிறுமியிடம் அத்துமீறும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இன்றைய கால திரைப்படத்திலும் பள்ளிப்பருவ காதலை காண்பித்து கல்லா மட்டுமே கட்டிவிடும் நிலையில், வாழ்க்கையின் பிற்பகுதியில் நடப்பதை பெரும்பாலான இயக்குனர்கள் காட்சிப்படுத்துவதில்லை.
இந்த விஷயம் போன்று ஆரணி பகுதியில் நடைபெற்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி பேருந்து நிறுத்தத்தில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பள்ளி செல்லும் சிறுமிகள் பேருந்து கழிவறைக்கு காலையில் பள்ளி சீருடையுடன் வருகை தருகின்றனர். பின்னர் கழிவரையில் உடையை மாற்றிக்கொண்டு, தன்னை பின்னாளில் தெருவில் நிறுத்தப்போகும் நபரின் உண்மையை அறியாமல் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிகின்றனர். பின்னர் மாலை வேளையில் வழக்கம் போல பள்ளி விடும் நேரத்திற்கு முன்னதாக வருகை தந்து ஆடையை மாற்றிவிட்டு பெற்றோர்களிடம் பள்ளி சென்று வருவது போல வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் இவர்களின் பள்ளி படிப்பும், எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கும் உண்மையை அறியாமலும், புரியாமலும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது பள்ளிக்கு கூட செல்ல இயலாத சிறுமிகளும், இவர்களின் பிடியில் சிக்கி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இவர்களை வைத்து காமுக கூட்டம் தங்களின் காம இச்சையையும் தீர்த்தும், பண சம்பாதிப்பையும் செய்து வருகிறது. இதனால் பல சிறுமிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி, இன்னும் ஒருபடி மேலே சென்று புகைப்படத்தை காட்டி மிரட்டி வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் குடும்பத்துடன் வேறு இடத்திற்கு செல்வது அல்லது தற்கொலை செய்வது போன்று துயர சம்பவங்கள் நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் கட்டாயம் மனந்திறந்து பேசுவதும், உனக்கு என்ன ஆனாலும் நான் இருக்கிறேன், என்னிடம் சொல் என்ற வார்த்தையும் தான் அவர்களை மேற்கூறிய பிரச்சனையில் சிக்க வைக்காமலும், சிக்கினாலும் மீண்டும் வரவும் உதவி செய்யும். மேலும், பள்ளி, கல்லூரி வாயில்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி சிறுமிகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
School girl spoil life drama lover and sexual animal culprits