15 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன்.! உடந்தையாக ஆசிரியை செயல்பட்ட கொடூரம்.!! இராசபாளையத்தில் பேரதிர்ச்சி.!!
school girl sexual harassment by youngster with help of school teacher
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. பாடத்தை கற்பித்து கொடுக்க வேண்டிய ஆசிரியர்., தனது மாணவியை சிறுமி என்றும் பாராது அத்துமீறியது தெரியவந்தது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராசபாளையம் கிறிஸ்துராஜபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சார்ந்த 15 வயதுடைய மாணவி., பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த டிராக்டர் ஓட்டுநர் சுரேஷ்குமார் (வயது 35) என்ற காம கொடூரன் பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான்.
இந்த அத்துமீறலுக்கு பள்ளியில் பணியாற்றி வரும் கலா (வயது 40) என்ற கொடூர ஆசிரியையும் உடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்., சுரேஷின் இல்லமும் - சிறுமியின் இல்லமும் அருகருகே இருந்ததால் சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இந்த சமயத்தில் ஆசிரியையின் உதவியுடன் சுரேஷ் அத்துமீறி வந்துள்ளான்.
சிறுமியும் படிப்பின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதால் இது குறித்து இல்லத்தில் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில்., சம்பவத்தன்று பள்ளிக்கு சிறுமியை அழைத்து செல்வதாக கூறிய காம கொடூரன்., அங்குள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று அத்துமீற முயன்றுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி கத்தி கூச்சலிடவே., ஆதரிச்சியடைந்த சுரேஷ் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளான்.
சிறுமி ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் அலங்கோலமாக வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறியழுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கலா மற்றும் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
school girl sexual harassment by youngster with help of school teacher