கோவிலுக்கு வந்த சிறுமியை கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர்.! கொலை மிரட்டல் விட்டதால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த ராஜ் (வயது 50). இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். அதேசமயம் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ராஜ், கோவிலுக்கு வந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். தான் கர்ப்பம் அடைந்தது தெரியாமல் சிறுமி இருந்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி போவதற்கு தொடர்ந்து மாத்திரை சாம்பிட்டு வந்துள்ளார். இதனால் கரு கலந்துள்ளது. மேலும் வயிற்று வலி அதிகரிக்கவே, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

ஆறு மாதமான குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் துறை, சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சிறுமியை கர்ப்பமாக்கியது மட்டுமல்லாது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று திமுக பிரமுகர் ராஜ் மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜை காவல்துறை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl raped dmk member


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->