காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த இளைஞர்... உயிருக்கு போராடும் பள்ளி மாணவி..!
school girl pregnant lover gives abortion tablet
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அடுத்த வெள்ளங்கள் பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கூலித்தொழிலாளி இவரது மகன் வசந்த், வசந்துக்கு 21 வயதாகிறது. இவர் அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர் தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவார், அப்போது காட்டூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக உருவெடுத்தது. இதை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தார்கள்.
இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி கர்ப்பமானர். இது குறித்து அவர்களிடம் கூற அவர் கருக்கலைப்பு செய்யும் மாத்திரையை வாங்கி கொடுத்திருக்கிறார். இதை சாப்பிட்ட காரணத்தினால் சிறுமிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனால், அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பம் ஆனதும் அவர் கருவை கலைப்பதற்கான மாத்திரை சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாத்தாவிடம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த கல்லூரி மாணவர் வசந்த் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school girl pregnant lover gives abortion tablet