கனமழை இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!! மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்றிரவு முதல் சென்னையில் அசோக்நகர், கிண்டி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல்,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதே போல் விழுப்புரம் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். 

கனமழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school colleges leave for heavy rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->