உடல்நிலையை கண்காணிக்க ஆடையை கண்டறிந்த சத்தியமங்கலம் சாதனை செல்விகள்..! உலகளவில் முதல் பரிசு..!!
sathyamangalam bannari college girls won first price health check up dress discovered
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியை சார்ந்த நான்கு மாணவிகள்., உடல் நல குறைவால் பாதிக்கபட்டவர்களின் உடல் நிலையை கண்காணிக்கும் சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர்..
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியில்., தமிழக மாணவிகளின் கண்டுபிடிப்பானது முதல் பரிசை வெற்றிகொண்ட நிலையில்., பரிசுத்தொகையான ஆயிரம் டாலரையும் (இந்திய மதிப்பில் ரூ.71197.20) பெற்றுள்ளனர்.
இன்றுள்ள பரபரப்பு மிகுந்த இயந்திரத்தன்மை கொண்ட வாழ்வியல் சூழ்நிலையில்., நமது குடும்பத்தில் இருக்கும் நோயாளிகள் மற்றும் முதியவர்கள்., மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிப்பது பெரும் சவாலான விஷயமாக உள்ளது.
இவ்வாறாக இருக்கும் நபர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தினை துல்லியமாக கண்டறிந்து., தகுந்த சமயத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயமான மற்றும் அவசியமான ஒன்றாகும். இது பெரும்பாலானோருக்கு சாத்தியமற்று போகிறது.
இதுமட்டுமல்லாது தனது உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வலிகளை வெளியே சொல்ல முடியாத நிலையிலும்., சூழ்நிலையிலும் சிலர் உள்ளனர். இது போன்றவர்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றத்தினை உரியவரிடம்., சரியான நேரத்தில் வழங்கும் வகையில் இருக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்ட ஆடைகளை வடிவமைத்துள்ளனர்.
சத்தியமங்கலத்தின் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் இருக்கும் மின்னணுவியல் துறையினை சார்ந்த மாணவிகளான சுஸ்மிதா., சன்மதி., விஷாலி மற்றும் தனஸ்ரீ ஆகியோர் கல்லூரி நிர்வாகத்தார் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் ஆடையை கண்டறிந்துள்ளனர். இந்த ஆடை நோயாளிகளின் இரத்த அழுத்தம்.,, இதயத்தின் செயல்பாடு மற்றும் சுவாச செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது இந்த ஆடை அலைபேசியில் உள்ள செயலியில் இணைக்கப்பட்டுள்ளதால்., நோயாளின் உடல் நிலை குறித்த குறுஞ்செய்திகள் உடனுக்குடன் அவரது குடும்ப உறவினர்களுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
sathyamangalam bannari college girls won first price health check up dress discovered