சினிமா மோகத்தால் தொலைந்து போன நபரை, 15 வருடம் கழித்து குடும்பத்துடன் சேர்த்த கரோனா.. சாத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நந்தவனாம்பட்டி பகுதியை சார்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக சினிமா மோகத்தில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்துள்ளார். 

இவரை காணாது தேடியலைந்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாண்டியராஜன் குறித்த தகவல் மேற்படி கிடைத்ததால் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மேலும், இல்லத்தில் இருந்து வெளியேறிய பாண்டியராஜன் மீண்டும் இல்லாதார்களை தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளார். இப்படியே 15 வருடங்கள் கழித்த நிலையில், சினிமா மோகத்தில் சென்னைக்கு சென்ற பாண்டியராஜன், கிடைத்த பணிகளை பார்த்து பிழைத்து வந்துள்ளார். 

தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக வருமானத்தை இழந்த பாண்டியராஜன், சொந்த ஊர் செல்ல முடிவு செய்து மீண்டும் சாத்தூருக்கு நடந்தும், வழியில் கிடைத்த லாரி மூலமாக வந்து சேர்ந்துள்ளார். 

இவரை கண்ணீருடன் வரவேற்ற இல்லாதார்கள், கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், கரோனா வைரஸ் நீண்ட நாட்கள் பிரிந்திருந்த நபரை குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathur missning man return due to corona virus no work problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->