தள்ளாடும் கழகத்தை தலைநிமிர்த்த வா., சசிகலா பெயரில் மீண்டும் சர்ச்சை போஸ்டர்..!
Sasikala Poster at Tirunelveli about Take AIADMK 17 June 2021
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ள சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவதாக பல ஆடியோக்கள் வெளியாகி வருகிறது.
அதிமுக தொண்டர்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அதிமுக தலைமை, சசிகலாவிடம் பேசி ஆடியோ உறுதியானதாக கூறி முன்னாள் அமைச்சர், எம்.பி உட்பட 15 முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் புகைப்படம் இடம்பெற்று இருந்த நிலையில், தாயே வா., தலைமை ஏற்க வா., தள்ளாடும் கழகத்தை தலைநிமிர்த்த வா., தொண்டரின் துயர் துடைக்க வா என்று வசனங்களும் இருந்தது.
இந்த போஸ்டர் தொடர்பாக விசாரணை செய்கையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சார்ந்த அதிமுக முன்னாள் வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அதிமுக - அமமுக வட்டாரங்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Sasikala Poster at Tirunelveli about Take AIADMK 17 June 2021