ஜப்பானில் உயிரிழந்த தமிழர்.. உடலை மீட்டு வர சரத்குமார் கோரிக்கை.!!
Sarath kumar request to govt
ஜப்பானில் மர்மமான முறையில் உயிரிழந்த மாதவன் பூதஉடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளம் கிராமம் ஆனிகுளத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் மாதவன் ஜப்பானில் உள்ள தகுமிடி ஹயோகோகென் என்ற இடத்தில் வேலை செய்து வந்த நிலையில், 01.09.2020 அன்று மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிகிறேன்.
ஜப்பானில் பணிபுரிய சென்ற மாதவனின் உயிரிழப்புக்கான காரணத்தை விசாரணையின் மூலம் கண்டறியவும், அவரது பூத உடலை சொந்த ஊரான பாப்பான்குளம் இராமத்திற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.
English Summary
Sarath kumar request to govt