காதலிக்கும் போதே திருமண ஆசை.. கேள்விக்குறியான இளம்பெண்ணின் வாழ்க்கை.. எரிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.!!
Sankarankoil child murder Love Affair is damaged girl life
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கோமதி சங்கர் திரையரங்கம் பகுதியில், ஆளரவம் இல்லாமல் தற்போது இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த கோமதி சங்கர் தியேட்டர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் 60 விழுக்காடு தீக்காயத்துடன் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இங்கு சடலமாக இருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், சங்கரன்கோவில் சங்குபுரம் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்த கோமதி (வயது 21) மற்றும் கோமதியின் தாயார் இந்திராணி, அவரது தந்தை சண்முகவேல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருமணம் முடியாத கோமதிக்கு 21 வயது ஆகும் நிலையில், காதலுடன் கொண்ட திருமணத்துக்கு முந்தைய உறவு காரணம் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க இயலாத நிலையில், குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 4 நாட்களுக்குள்ளாகவே, இந்திராணியின் உதவியுடன் கோமதி சங்கர் திரையரங்கு வளாகத்தில் குழந்தையை வைத்து எரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Sankarankoil child murder Love Affair is damaged girl life