இந்த கடைகள் எல்லாம் 24 மணி நேரம் இயங்காது.!! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை.!!
SANDHEEP NANDHURI SAYS ABOUT 24 HOURS BUSINESS
10 பேருக்கு குறைவான ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் 24 மணி நேரம் கடை திறக்க அனுமதி இல்லை, மீறி திறப்பது சட்ட விரோதம் " என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இன்று, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , " 24 மணி நேரம் கடை திறப்பதற்க்கான திருத்தப்பட்ட அரசானை சிறு நிறுவனங்களுக்கு பொருந்தாது, காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரை மட்டுமே சிறு நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி என்றும்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ள தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், மற்றும் கடைகள் தற்காலிகமாக SAV பள்ளி மைதானத்தில் இயங்கும், அதற்க்கான ஆய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
SANDHEEP NANDHURI SAYS ABOUT 24 HOURS BUSINESS