மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கள்ளக்காதலை கைவிட்ட பெண் குத்திக்கொலை..! - Seithipunal
Seithipunal


பல வருடம் கொண்ட தவறான தொடர்பை பெண் கைவிட்டதால், அவரை கள்ளக்காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் கணவரை பிரிந்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த பெண்மணி சித்ரா. இவருக்கும், அங்குள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான ஏழுமலை என்ற நபருக்கும் இடையே கள்ளதொடர்பு பழக்கம் இருந்துள்ளது. 

இவர்கள் இருவரும் பல வருடமாக உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சித்ராவின் வீட்டிற்கு சென்று ஏழுமலை பல நேரங்களில் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படிப்பை முடித்துவிட்டு மகள்கள் இருவரும் வேலைக்கு செல்லத் துவங்கிவிட்ட நிலையில், இதனால் நமது கள்ளக்காதல் உறவை முறித்துக் கொள்ளலாம் என்று சித்ரா தெரிவித்துள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத ஏழுமலை அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை செய்த நிலையில், ஏழுமலைக்கும் - சித்ராவுக்கும் இடையே இது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இதனைப்போன்று சித்ராவின் வீட்டிற்கு ஏழுமலை வருகை தந்துள்ளார்.

அங்கு சித்ராவிடம் உல்லாசமாக இருக்க கோரி ஏழுமலை வலியுறுத்தவே, இதற்கு சித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Woman Decline Affair Life Man Got Angry and did Murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->