19 வயது மனைவியை, திருமணமான ஒரே மாதத்தில் கொலை செய்த 39 வயது கொடூர கணவன்.. சந்தேகத்தில் அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை சந்தேகத்தால் கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள கோரத்துக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த 39 வயது நபர் தங்கராஜ். அவனுக்கும், அவனது உறவுக்காரப் பெண்மணியான 19 வயது மோனிஷா என்ற பெண்மணியுடன் பிப்ரவரி 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணத்திற்கு முன்னதாக பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வந்த மோனிஷா, திருமணத்திற்கு பின்னர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் அப்பில் சேட் செய்வதாகவும் அடிக்கடி தங்கராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஒரு கட்டத்தில் மோனிஷாவிற்கும் - தங்கராஜுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று தங்கராஜ் வெளியே சென்ற சமயத்தில், அவரது வீட்டிற்கு மோனிஷாவின் அத்தை மகன் வந்துள்ளார். 

அத்தை மகனுக்கு வெளியே சென்று கேக் வாங்கி வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் தங்கராஜ் வீட்டிற்கு வந்து விடவே, அவரிடமும் மோனிஷாவின் அத்தை மகன் பேசி விட்டுச் சென்றுள்ளார். 

அத்தை மகன் போகும் வரை பொறுமையாக இருந்து தங்கராஜ், அவர் வீட்டை விட்டு சென்றதும் மனைவியிடம் சண்டை பெற்றுள்ளார். மேலும், தான் இல்லாத போது எதற்காக? உன் அத்தை மகன் வீட்டிற்குள் வந்தான்? என்றும் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த தகராறை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் இரவு நேரத்தில் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் கத்தியால் மோனிஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில் உண்மை தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக வீராணம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Wife Monisha 19 Aged Murder by Husband Thangaraj 39 Aged and Suicide Police Investigaton


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->