சாதி மாறி திருமணம்., காதல் கணவனை அடித்தே கொலை செய்த பட்டதாரி ஆசிரியை அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.!
salem wife killed her husband
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த உள்ள அத்தனூர் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) இவருடைய மனைவி இளமதி (வயது 30) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இளமதி மன்னார் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மணிகண்டனுக்கு மது குடித்துவிட்டு வந்து தினமும் இளமதி உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், பிள்ளைகளிடமும் முரட்டுத்தனமாக நடந்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று மாலை 6 மணி அளவில் வழக்கம்போல மது அருந்தி வந்த மணிகண்டன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த மனைவி இளமதி, அவரை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. மேலும், ஆத்திரம் தாங்காத இளமதி உருட்டுக்கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "எம்ஃபில் வரை படித்துள்ள மணிகண்டனும், பி,எட் படித்த நானும் வேறு வேறு சமுதாயத்தை (சமுதாயம்=சாதி) சேர்ந்தவர்கள். ஒரே கல்லூரியில் படிக்கும் போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை மீறி நான் மணிகண்டனை திருமணம் செய்து கொண்டேன்.
மணிகண்டனுக்கு சென்னையில் அரசு வேலை கிடைத்தது. அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து மணிகண்டன் மது பழக்கத்துக்கு அடிமையாகி என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இது எனக்கு மிகுந்த வேதனையைத் கொடுத்தது. நேற்று வரம்புமீறி எனது கணவர் மணிகண்டன் நடந்து கொண்ட காரணத்தினால், அவரை நான் தாக்கினேன். அதனால் அவரின் உயிர் பறி போயுள்ளது." என்று ஆசிரியை இளமதி அவரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
English Summary
salem wife killed her husband