சேலம்: 50 நண்பருடன் சவகாசம்.. காவல்துறை விசாரணையில் அதிரவைக்கும் வாக்குமூலம்.!!
Salem Vazhapadi Man Murder Case due to Affair Shocking Truth Told by Police Investigation
கள்ளக்காதலால் கணவனை மனைவி கொலை செய்த விவகாரத்தி பேரதிர்ச்சி வாக்குமூல தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 39), அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு அருகே வாழை இலை வியாபாரம் செய்து வந்துள்ளார். பி.பி.ஏ படித்து இருந்தாலும், செல்போன் என்ற விஷயத்தை அறியாத தனது அக்கா மகளான ஷாலினியின் மீது காதல் வயப்பட்டு இருந்த பிரபு, அவரையே திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். படிக்கவில்லை என்றாலும் அன்பு, பண்பு, பாசம் போன்ற விஷயங்களில் மேலோங்கி இருந்த பிரபு, தனது அன்பு மனைவிக்கு ஸ்மார்ட்போனை பரிசளித்து இருக்கிறார்.
ஸ்மார்ட் போனில் முகநூலில் கணக்கு தொடங்கி அதில் மூழ்கியிருந்த ஷாலினி, பின்னாளில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சகவாசத்தை வளர்த்து, அதில் ஒருவரான காமராஜ் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவல் காமராஜுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்து இறுதியில் விரக்தியடைந்து வாழையிலை கடையிலேயே அவர் தங்க தொடங்கியுள்ளார். இறுதியாக கடந்த வாரம் மனைவி பாசத்தை காண்பித்து வீட்டிற்கு அழைத்து, துரோகத்தால் வீழ்த்தி பிரபுவை கொலை செய்தார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஷாலினி காவல்நிலையத்தில் அளித்துள்ள வாக்கு மூலமானது வெளியாகியுள்ளது. இது குறித்த வாக்குமூலத்தில், " எனக்கும் - எனது கணவருக்கும் 16 வயது வித்தியாசம். இதனால் அவர் எனது விருப்பங்களை சரியாக நிறைவேற்றவில்லை. மேலும், கணவர் முகநூல், வாட்ஸ் அப் என்று எந்தவித தகவல் தொழில்நுட்ப விஷயமும் தெரியாமல், இலை கடையிலேயே பணியாற்றி வருகிறார். அவர் வாங்கிக்கொடுத்த செல்போன் மூலமாக முகநூலில் நண்பர்களை தேடிய நிலையில், எனது விருப்பத்திற்கு ஏற்ப 23 வயதான காமராஜ் இருந்தார்.
அவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டேன். இதற்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பெயரை சொல்லி நாடகமாடினேன். இறுதியில் என்னை காவல் துறையினர் விசாரித்ததில் பயத்தில் உண்மையை சொல்லிவிட்டேன் " என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காமராஜ் அளித்துள்ள வாக்குமூலத்தில், " கணவர் இல்லை என்றால் நாம் நிம்மதியாக வாழலாம் என்று தனது காதலி ஷாலினி சொன்ன வார்த்தைகளை நம்பி, கணவர் பிரபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். சம்பவத்தன்று ஷாலினி வீட்டிற்கு சென்று, அவர் கதவை திறந்ததும் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டேன். நள்ளிரவு 11:30 மணியளவில் கணவர் உறங்கியதும் செல்போன் மூலம் தகவல் சொல்லியதை தொடர்ந்து, வீட்டில் சென்றேன்.
பின்னர், அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பிரபுவின் கால்களை ஷாலினி பிடித்துக் கொள்ள, முகத்தை துணியால் இறுக்கி மூடி பிரபுவின் மீது ஏறி அமர்ந்து மூச்சை நிறுத்தி அவரை கொலை செய்தேன். கொள்ளை நாடகம் காண்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு, அவர் கையில் இருந்த மோதிரத்தையும் எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தேன். இப்பொது சிக்கிக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஷாலினியை ஷாலும்மா என்று அழைத்த காமராஜ், அவரை நேரில் பார்க்கும் போது ஷாக் ஆகினாராம். முகநூலில் உள்ள எடிட்டிங் புகைப்படத்தை பார்த்து வீழ்ந்த காமராஜுக்கு நேரில் சென்ற போது ஷாலினி கொஞ்சம் கருப்பாகவும், உடல் பருமனுடன் இருந்துள்ளார். வேறு வழியின்றி காமராஜும் காம வலையில் விழுந்து உல்லாசமாக இருந்ததும் அம்பலமானது. போட்டோஷாப்பை பார்த்த அந்த 50 அற்ப பதர்களும் ஷாலினிக்கு நூல் விட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த 50 பேரில் காமராஜ் தான் தற்போது கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.
பிரபு - ஷாலினி தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ள நிலையில், தற்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உண்மையான அன்பை உணராமல் முகநூல் வாயிலாக ஏற்படுத்திய நட்பு, என்ன மாதிரியான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நலமே.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem Vazhapadi Man Murder Case due to Affair Shocking Truth Told by Police Investigation