இரயில் தண்டவாளத்தில் கல்லை போதை ஆசாமிகள்.. பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மாவெளிபாளையம் - மகுடன்சாவடி பகுதியில் இரயில் பாதையானது இருக்கிறது. இந்த பாதையில் கடந்த திங்கள் கிழமை இரயில் சென்ற நிலையில், சுமார் ஐந்தரை அடி உயரம் இருக்கும் கல்லை இரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வைத்துள்ளனர். 

இதனைகண்டுகொண்ட இரயில் ஓட்டுநர் ரவி என்பவர், உடனடியாக இரயில் சாமர்த்தியமாக நிறுத்தியுள்ளார். இருந்தாலும், இரயில் கல்லில் மோதி 150 அடி தூரம் சென்று, பின்னர் இரயில் நின்றுள்ளது. 

இரயிலை ஓட்டுனர் நிறுத்தாமல் இருக்கும் பட்சத்தில், இரயில் கவிழும் அபாயமும் அதிகரித்து இருக்கும். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள பூசாரிநாயகன் வளவில் வளைகாப்பிற்காக வந்த சேலம் பார்ப்பட்டி பகுதியை சார்ந்த பாபு மற்றும் நாகலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சவாலில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் தண்டவாளத்தில் மது அருந்திய நிலையில், கல் வைத்தால் இரயில் கவிலுமா? என்ற பிரச்சனை எழுந்துள்ள நிலையில், கல்லை வைத்து சோதனை செய்து இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி கல்லை வைத்து நீண்ட நேரம் காத்திருந்தும் இரயில் வரவில்லை என்பதால், இருவரும் கல்லை அப்படியே போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், இரயில் சரக்கு இரயிலாக இருந்தாலும், ஓட்டுனரின் சுதாரிப்பால் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem train track stone investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->