மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Salem school girl rape
சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் பாலாஜி, இவர் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து பிற மாணவிகளின் பெற்றோர், பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் போராட்டத்தையாடுத்து பள்ளியின் தலைமையாசிரியர், போலீசில் புகார் அளித்தார் இதனையடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமையாசிரியர் பாலாஜி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி, தலைமறைவானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.