ரயிலை கவிழ்க்க விபரீத செயல் புரிந்த மர்ம நபர்கள்.! சேலத்தில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சேலத்தில், இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது, ரயில் ஓட்டுனர் அதனை முன்கூட்டியே பார்த்ததால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இருக்கும், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காகளின் வழியாக சேலம்-சென்னை மற்றும் சேலம்-பெங்களூர் ரயில்வே இருப்பு பாதைகள் இருக்கின்றது. இந்நிலையில், இன்று சேலம்-சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் கல்லை தூக்கி வைத்துவிட்டு சென்று இருக்கின்றனர்.

அப்போது, அந்த இருப்பு பாதை வழியாக வந்த ரயிலானது கல்லின் மீது மோதுவதற்கு முன்பாகவே இரயில் ஓட்டுனர் அதனை கவனித்து விட்டார். உடனடியாக அவர் ரயிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சாதுர்யமாக ரயிலை நிறுத்தி விட்டார். 

அதன் பின்னர் கீழே இறங்கி சென்று, கல்லை கீழே தள்ளிவிட்டு இரயிலை இயக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem railway path in stone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->