சேலம் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!
salem murder case arrested
சேலம் மாவட்டத்தில், மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த மூதாட்டி மகனின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் எனும் மூதாட்டி. இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக அவரது மகன் சிவக்குமார் போலீசில் சரணடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நல்லமாள், அண்மையில் அவரது நிலத்தை விற்று கிடைத்த பணத்தைக் கேட்டு சிவக்குமார் நச்சரிந்து வந்ததும், பணத்திற்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலியுடன் இணைந்து, மூதாட்டி நல்லம்மாளுக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தததும் தெரிய வந்தது.
மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சிவக்குமாரின் கள்ளக்காதலியான, ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவி ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து, இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
salem murder case arrested