கள்ளக்காதலியை கொலை செய்தது ஏன்?.. கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்..!!
Salem illegal affair murder police investigation
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் நங்கவல்லி பகுதியை சார்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் மேட்டூரில் மாட்டு இறைச்சி கடையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். செந்தில் குமாருக்கும், கொளத்தூர் பகுதியை சார்ந்த கணவரை இழந்து வாழ்ந்து வரும் பெண்மணிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த செந்தில்குமார் மண்ணெண்ணெய்யை பார்வதியின் மீது ஊற்றி தீவைத்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்த பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், நேற்று காலை நேரத்தில் பார்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைதான செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளையில் பரபரப்பு வாக்குமூலம் கிடைத்துள்ளது.
இது குறித்த வாக்குமூலத்தில், ஐயம்புதூர் பகுதிக்கு சமையல் பணிகளுக்கு சென்ற நேரத்தில் எனக்கும், பார்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. இந்த சமயத்திலேயே, பார்வதிக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளான். மேலும், செந்தில்குமார் மீது ஏற்கனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளதும், ரவுடி போல அப்பகுதியில் வளம் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem illegal affair murder police investigation