மனைவி கட்டில் உல்லாசம்.. கணவன் வீட்டில் பிணமாக.. தந்தையை தேடி ஏங்கிய பச்சிளம் குழந்தைகள்.!!
Salem husband Murder by wife with affair man Police investigation
சூரமங்கலத்தில் கணவரை கொலை செய்து, கள்ளக்காதலனுடன் தலைமறைவாகியுள்ள பெண்மணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்தவர் சேட்டு.
இவரது மனைவியின் பெயர் பூங்கொடி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பூங்கொடிக்கு கோதம்பள்ளம் பகுதியை சார்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் சேட்டிற்கு தெரியவந்த நிலையில், இது குறித்து மனைவியை கண்டித்துள்ளார். இதனைஏற்றுக்கொள்ளாத பூங்கொடி, கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளை உறவினரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த பூங்கொடி, வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.
சேட்டின் இல்லம் கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருந்த நிலையில், அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சேட்டு பிணமாக வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், பச்சிளம் குழந்தைகள் தாய் எங்கே சென்றார்? தந்தைக்கு என்ன ஆனது? என்பது கூட அறியாமல் உறவினரின் இல்லத்தில் இருந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem husband Murder by wife with affair man Police investigation