மனைவிக்கு ஆசையாக இருசக்கர வாகனம் ஓட்ட கற்று கொடுத்த கணவர்.. அரங்கேறிய விபத்து.. கண்ணீரில் குழந்தைகள்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகேயுள்ள சின்னாக்கவுண்டம்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் தாரமங்கலம் - சங்ககிரி சாலையில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (வயது 40).

இவர்கள் இருவருக்கும் நேகா என்ற 12 வயது மகளும், நந்தகிஷோர் என்ற 10 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனிச்சாமி, தனது மனைவி மல்லிகாவிற்கு இரு சக்கர வாகனம் இயக்க கற்றுக்கொடுத்துள்ளார். 

தாரமங்கலம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனம் இயக்க பழகிய நிலையில், மல்லிகா வாகனத்தை இயக்கினார். பழனிச்சாமி பின்னால் அமர்ந்துகொண்டு இருந்தார். இந்த நேரத்தில், அடையாளம் தெரியாத வாகனமொன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிர்க்கமால் சென்றுள்ளது. 

நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் உயிருக்கு துடிதுடித்து போராடிய நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Husband and wife died in Accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->