முகநூலில் நூல் போட்டு, பெண்களை கடத்தி சித்ரவதை செய்து கற்பழிப்பு.. சேலத்தில் கைதான பகீர் கும்பல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சார்ந்தவர் சந்து மணிராஜா. இவரது மகன் சின்னத்துரை (வயது 30). இவர் மக்கள் தேசம் கட்சியில் நகர செயலாளராக இருந்து வருகிறார். ஆத்தூர் ஜோதி நகர் பகுதியை சார்ந்தவர் மோகன் பாபு (வயது 28). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்களுக்கு ஆத்தூர் விநாயகபுரத்தில் வாடகை வீடு உள்ளது. இருவரும் அங்கு தங்கியிருந்துள்ளனர். 

இந்த நிலையில், இவர்களின் இல்லத்தில் 4 பெண்கள் அடைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் மேற்கொண்ட சோதனையில் 4 பெண்கள் மற்றும் சின்னத்துரை, மோகன்பாபு ஆகியோர் இருந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும் பெண்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நிலைமையை உணர்ந்த காவல்துறையினர், வீட்டிற்குள்ளேயே காமுகன்களை சிறிய கவனிப்பு செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 

பெண்கள் நால்வரையும் வீட்டில் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், இதனைப்போன்று பல பெண்களை இருவரும் சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது முகநூல் மற்றும் வாட் சாப் மூலமாக பெண்களின் தொடர்பை இருவரும் ஏற்படுத்திக்கொண்டு, கணவரை தவித்து பிற ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ள பெண்களை கண்டறிந்து, விஷயத்தை அறிந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

மேலும், இதே வீட்டில் 10 க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் சீரழித்ததும் தெரியவந்துள்ளது. இதனைப்போன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதன் மூலமாக இவர்கள் பணம் சம்பாரித்து வந்த நிலையில், இரண்டு காமுகன்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவனிடம் சிக்கியிருந்த பெண்களுக்கு அறிவுரை கூறியும் காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem girl sexual abuse police arrest gang


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->