குடும்பமாக சேர்ந்து பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரம்.. சேலத்தில் சிக்கிய கும்பலின் பகீர் வாக்குமூலம்.!!
Salem gang cheat girl and missuses forced prostitution police investigation going on
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள தாதாகாப்பட்டி பகுதியை பகுதியை சார்ந்தவர் லோகநாதன். லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கடந்த சில மாதமாக அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வறுமையால் வாடி வரும் இளம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கில், ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
காமுகன்கள் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்ததும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லோகநாதன் மற்றும் அவனது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவலாக லோகநாதனின் மனைவி உட்பட குடும்பமே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த பெண்களை வைத்து தொழிலாலதிபர்களை தங்களின் வலையில் விழ வைத்த காமுக கும்பல், தொழிலதிபர்களையும் புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
லோகநாதனின் தந்தையையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமறைவாக இருக்கும் லோகநாதனின் மனைவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த கும்பலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 6 பெண்கள் இம்மோசடி கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem gang cheat girl and missuses forced prostitution police investigation going on