கீழே கிடந்த வானொலி., இயக்கிப்பார்த்தபோது அதிர்ந்து போன விவசாயி.! குழப்பத்தில் போலீசார்.!
Salem former died police investigation
சேலம் அருகே தும்பல் பட்டி பகுதியில் வானொலி ஒன்று கீழே கிடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த விவசாயி மணி(50) என்பவர் இரவு நேரத்தில் அந்த வானொலிப் பெட்டியை கண்டெடுத்து வீட்டில் வந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் புதன்கிழமை மதியம் அந்த வானொலிப் பெட்டியை எடுத்து அதில் மின்இணைப்பு கொடுத்து இயக்க முயற்சித்திருக்கிறார்.
அப்போதுதான் இந்த வானொலிப் பெட்டி வெடித்து சிதறியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றார். மேலும், அவருடைய உறவினர்களும் பலத்த காயமடைந்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெடித்து சிதறிய பொருள் என்ன என்பது குறித்து தடவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். வானொலிப் பெட்டி வெடித்து சிதறி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
English Summary
Salem former died police investigation