காதலித்துவிட்டு எஸ்கேப் ஆக நினைத்த காதலன்.. குடும்பத்துடன் உள்ளே தூக்கி வைத்த பெண்மணி.!!
Salem Family member arrest by police due to Fake Love Atrocity
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை அடுத்துள்ள நடுபட்டி எல்லத்தூர் பகுதியை சார்ந்த பெண்மணி, பொறியியல் பட்டதாரியாக இருந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகன் கிரிசங்கரும் பொறியியல் பட்டதாரி ஆவார்.
இளம்பெண்ணும், கிரிசங்கரும் கடந்த சில வருடமாக காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பாக சம்மதம் தெரிவிக்கவே, கிரிசங்கரின் இல்லத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் காதலன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பெண் திருமணம் செய்து வைக்க கூறி காதலனின் இல்லத்திற்கு முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். தர்ணாவிற்கும் கிரிசங்கரின் பெற்றோர்கள் பதில் சொல்லவில்லை என்று தெரியவருகிறது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கிரிசங்கர், அவரது தாய் மற்றும் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem Family member arrest by police due to Fake Love Atrocity