கல்லால் அடித்து நண்பன் கொலை?... சேலத்தில் பயங்கரம்..!!
Salem daily wages worker murder police investigation
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அம்மன் நகர் பகுதியை சார்ந்தவர் மகாராஜா (வயது 36). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
நேற்று முன்தினம் வெளியே சென்ற மகாராஜா வீட்டிற்கு திரும்பாத நிலையில், இவரை உறவினர்கள் அங்குள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள அம்மன் நகர் டான்சி குடியிருப்பு பகுதியில் முகம் மற்றும் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போல மஹாராஜா பிணமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினத்தின் போது ராஜா தனது நண்பர்களுடன் டான்சி குடியிருப்பு பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது, இந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி நண்பர்கள் கல்லால் அடித்து கொலை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். மகாராஜாவின் நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem daily wages worker murder police investigation