மகனின் முடிவால், விபரீத முடிவெடுத்த பெற்றோர்.. சேலத்தில் கண்ணீர் சோகம்..! - Seithipunal
Seithipunal


நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுப்பு தெரிவித்ததால், விரக்தி அடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி இளம்பிள்ளை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் தங்கமணி - ரத்தினா. இந்த தம்பதிக்கு ராஜா அண்ணாமலை என்ற மகன் உள்ள நிலையில், இவர் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், அவருக்கும் பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கும் இடையே திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் ராஜா அண்ணாமலை பேசி வந்த நிலையில், வேறு ஒருவரை அந்த பெண் காதலிப்பதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, எந்தவிதமான காரணமும் கூறாமல் ராஜா திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் நிலையில், திருமணத்தையும் நிறுத்த கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ராஜாவின் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Couple Suicide due to Son Reject Marriage after Engagement 24 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->