17 வயது சிறுமிக்கு குழந்தை.. வடமாநில இளைஞர் சேலத்தில் கைது.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியை சார்ந்த வடமாநில 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்துக்கொண்டு வந்துள்ளார். இதே பகுதியில், பீகார் மாநிலத்தை சொந்தமாக கொண்ட இளைஞர் சிக்னெதா தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். இவர் அங்குள்ள வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்துள்ளார்.

வடமாநில இளைஞர் சிறுமியுடன் பழகி வந்த நிலையில், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி கடந்த வருடத்தில் சொந்த ஊருக்கு கடத்தி சென்று சிறுமியை திருமணம் செய்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு பின்னர் சிறுமியை கடத்தி சென்ற காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், சிறுமியுடன் அங்குள்ள மய்யனூரில் சிக்னெதா வசித்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

இதில் சிறுமிக்கு குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியான காவல் துறையினர், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிக்னெதாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Child sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->